குற்றியலுகரப் புணரியல்
குற்றியலுகர ஈறுகள் வருமொழியோடு புணரும் இயல்பினை இவ்வியல் உணர்த்துகின்றது. குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொற்கள் பொருட்பெயர் எண்ணுப்பெயர் ஆகியவற்றோடு புணரும்போது ஏற்படும் மாற்றங்களைக் கூறுகின்ற காரணத்தால் இவ்வியல் குற்றியலுகரப் புணரியல் என வழங்கப்பெறுகின்றது.
தொல்காப்பியர் இவ்வியலில் கூறுகிற குற்றியலுகரம் பற்றிய கருத்துகளை நன்னூலார் எழுத்ததிகாரத்தில் 94 ஆவது நூற்பாவிலுமää; திசைப்பெயர் புணர்ச்சியை உயிரீற்றுப் புணரியலில் 86 ஆவது நூற்பாவிலும்ää எண்ணுப்பெயர் பற்றிய கருத்துக்களை உயிரீற்றுப் புணரியலில் 188 ல் தொடங்கி 199 ஆவது நூற்பா வரையில் கூறுகின்றார்
இவ்வியலில் கூறப்பெறும் செய்திகள்.
1. குற்றியலுகரத்தின் இயலபு
2. குற்றியலிகரம்
3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி
4. குற்றுகரச் சிறப்பு புணர்ச்சி
5. குற்றுகர எண்ணுப் புணர்ச்சி
6. அதிகாரப் புறனடை
தொல்காப்பியம் குற்றியலுகர திசைப்பெயர்கள்:
திசைப்பெயர்கள் குற்றியலுகரத்தை ஈற்றில் கொண்டுள்ளன அவை தமக்குள் புணரும் போது ஏற்படும் புணரியல் மாற்றங்களை தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.
இரண்டு பெருந் திசைகள் தம்மோடு புணரும் போது ‘ஏ’ எனும் சாரியை இடையில் வந்து புணரும்.
திசைப்பெயர் முன் திசைப்பெயர்:
பெருந்திசைகளோடு கோணத்திசைகள் வருமொழியாக வந்து புணருமிடத்து நிலைமொழியினீற்றிலுள்ள குற்றியலுகரம் தான் ஏறி நின்ற வல்லின மெய்யோடும் கெடும் என்று புலவோர் கூறுவர். தெற்கு எனும் திசைகளோடு புணருங்காலத்து மேற்கூறப்பெற்ற மாற்றத்தோடு அதன் கண் நின்ற ‘ற’ கர ஒற்றுத் தன் வடிவு திரிந்து ‘ன’ கர ஒற்றாக மாறிப் புணரும்.
நன்னூல் திசைப்பெயர்
நான்கு திசைப் பெயர்களும் ஈற்றில் குற்றியலுகரத்தை கொண்டிருப்பனவாகும் குற்றியலுகரத்தை ஈற்றில் கொண்டிருக்கின்ற இத் திசைப்பெயர்களோடு திசையை குறிக்கும் பெயரும்ää வேறு பொருள்களைக் குறிக்கும் பெயரகளும் வருமொழியாக வந்து புணரும் போது நிலைமொழியின் ஈற்றில் நிற்கும் ‘கு’ எனும் உயிர்மெய்யும் அதன் அயலில் நிற்கும் ‘க’ கர மெய்யும் கெடுதலும் ஈற்றயலில் நிற்கும் ‘ற’ கர மெய் ‘ன’ கர மெய்யாகவும் ‘ல’ கர கெய்யாகவும் திரிதலும் ஆகும் புணர்ச்சியைப் பெறும்.3
தொல்காப்பியம் குற்றியலுகர எண்ணுப்புணர்ச்சி:
குற்றியலுகர ஈறுகளையுடைய எண்ணுப்பெயர்களுக்கு முன் எண்ணுபபெயர்களுக்கு முன் எண்ணுப்பெயர் அளவுப் பெயர் நிறைப்பெயர் பொருட்பெயர் முதலியன வருமொழியாக வந்து புணரும் போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார்;.
பத்து என்னும் எண்ணுப்பெயர் முன் பிற எண்ணுப்பெயர்கள்:
பத்து என்னும் எண்ணுப்பெயர் முன் இரண்டு எனும் எண்ணுப்பெயர் தவிர ஒன்று முதல் எட்டு முடிய உள்ள எண்ணுப்பெயரகள் வருமொழியாக வந்து புணரும் போது பத்து எனும் எண்ணுப்பெயரிலுள்ள குற்றியலுகரம் தான் ஏறிநின்ற மெய்யொடும் கெட்டு ‘ன’ சாரியை பெற்று முடியும்.
நன்னூல்
எண்ணலளவுப் பெயரும் நிறுத்தலளவுப் பெயரும் முகத்தலளவுப் பெயரும் நீட்டலளவுப் பெயரும் பிற பெயர்களும் வருமொழியாக வந்தால்
1. ஒன்று முதல் எட்டு ஈறாகவுள்ள எண்களுள் ஒன்று இரண்டு எனும் இரண்டு
எண்ணுப்பெயர்களும் முதல் குறில் நீளும்
2.மூன்று ஆறு ஏழு என்னும் எண்ணுப்பெயர்களின் முதல் நெடில் குறுகும்
3.ஆறும் ஏழும் அல்லாத ஆறு எண்களின் ஈற்றிலுள்ள உயிர்மெய்களும்
ஏழு எனும் எண்ணுப்பெயரின் ஈற்றிலுள்ள ‘உ’ கர உயிரும் மெடும்.
தொல்காப்பியம்
பத்தின் முன் இரண்டு:
பத்து எனும் சொல்லின் முன் இரண்ட எனும் எண்ணுப்பெயர் வருமொழியாக வந்து புணரும் போது பத்து எனும் சொல்லிலுள்ள ‘த’ கர மெய் கெட்டு ‘ண’ கர ஒற்று இரட்டிக்கும் என்று புலவர் கூறுவார்.5
தொல்காப்பியம்
ஒன்றுää இரண்டின் முன் பத்து:
ஒன்று இரண்டு எனும் எண்களிலுள்ள ஒற்றெழுத்துக்கள் ‘ர’ கர ஒற்றாக ஆகும் அவ்விடத்து ‘உ’ கரம் வரும்.6 (ன்ää ண் ää ர்)
இரண்டு எண்ணின் முன் பத்து:
இரண்டு எனும் எண்ணிற்கு இடைநின்ற ‘ர’கரம் அம் மொழி பொருளாமிடத்து நடக்கும் இடமின்றி கெடும்.7
நன்னூல்
ஒன்றுää இரண்டு எனும் எண்ணுப்பெயர் புணர்தல்:
1.ஈற்று உயிர்மெய்கெட்டு நின்றஒன்று எனும் எண்ணின் ‘ந’ கர மெய் ‘ர’கர மெய்யாக மாறும்.
2.ஈற்று உயிர்மெய்கெட்டு நின்ற இரண்டு எனும் எண்ணின் ‘ண’கர மெய்யும் ‘ர’கர உயிர்மெய்யின் மேலுள்ள ‘அ’ கர உயிரும் கெட அவ்விரண்டு ‘ர’கர மெய்யின் மேலும் ஏற்புடைய இடங்களில் ‘உ’ கரம் வரும் நன்னூலார் ஒன்றுää இரண்டு ஆகியவை சேர்த்து குறிப்பிடுகிறார்.8
தொல்காப்பியம்
மூன்று ஆறு எண்ணின் முன் பத்து:
மூன்று எனும் எண்ணும் ஆறு எனும் எண்ணும் பத்து எனும் எண்ணோடு புணரும் போது அவை நெடுமுதல் குறுகி முடியும். மூன்று எனும் எண்ணிலுள்ள ‘ன’கர ஒற்று ‘ப’கர ஒற்றாக திரிந்து புணரும்.9
நன்னூல்:
மூன்று என்னும் எண்ணுப்பெயர் புணர்தல்:
பொது விதிப்படி ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற மூன்று எனும் எண்ணுப்பெயரின் முன்
1.‘ன’கர மெய் கெடுதலும்
2.வருமொழி முதலில்; வந்து மெய்யாகத் திரிதலும்
ஆகிய புணர்ச்சி மாற்றங்களை ஏற்புடைய இடங்களில் பெற்று நிற்கும்.10
தொல்காப்பியம்
நான்கு எனும் சொல்
நான்கு எனும் எண்ணின்கன் நிற்கும் ‘ன’கர ஒற்று ‘ற’கர ஒற்றாக திரியும்.11
நன்னூல்
நான்கு எனும் எண்ணுப்பெயர் புணர்தல்:
பொது வiதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு நான்கு எனும் எண்ணின் ‘ன’ கர மெய் ‘ல’ கர மெய்யாகவும் ‘ற’ கர மெய்யாகவும் ஏற்புடைய இடங்களில் திரியும்.12
தொல்காப்பியம்
ஐந்து எனும் சொல் புணர்தல்
ஐந்து எனும் எண்ணின்கன் நிற்கும் ‘ந’கர ஒற்று ‘ம’கர ஒற்றாக திரியும்.13
நனனூல்
ஐந்து எனும் எண்ணுப்பெயர் புணர்தல்:
பொது விதிப்படி ஈற்று உயிர்மெய் கெட்டு நின்ற ஐந்து எனும் எண்ணுப்பெயரின் ‘ந’ கர மெய்.14
1.வருமொழிக்கு முதலில் வருகிற மெய்யாகத் திரிதலும்
2.அதற்கு இனமாக திரிதலும்
3.கெடுதலும்
ஆகிய புணர்ச்சியை ஏற்கும் இடங்களில் பெறும்.
தொல்காப்பியம்
எட்டு எனும் சொல் புணர்தல்
எட்டு எனும் சொல்லின்கண் நின்ற ‘ட’கர ஒற்று ‘ண’கர ஒற்றாக திரியும்.15
நன்னூல்
எட்டு எனும் எண்ணுப் பெயர் புணர்தல்
பொது விதிப்படி ஈற்ற மெய் கெட்டு நினற எட்டு எனும் எண்ணுப்பெயரின் ‘ட’கர மெய்யானது உயிர்ää வலிää மெலிää இடை வழுத்துக்கள் வருமொழிக்கு முதலில் வர ‘ண’ கர மெய்யாக திரியும்.16
இப்படியாக நன்னூலார் ஒவ்ஒன்றாக தனித்தனியாக குறிப்பிடுகின்றார்
தொல்காப்பியம்
ஒன்பது எனும் சொல் முன் பத்து:
ஒன்பது எனும் எண்ணுப்பெயர் முன் பஃது எனும் சொல் வந்து புணரும்போது நிலைமொழியிலுள்ள ‘ஒ’கரத்தின் முன் ‘த’கர ஒற்றுத் தோன்றும் ‘ஒ’கரத்தின் முன் உள்ள ‘ன’ கர ஒற்று ‘ண’கர ஒற்றாக இரட்டித்து ‘ஊ’ காரம் பெற்று நிற்கும்.17பின்னர் அதனையடுத்துப் ‘பது’ என்பதிலுள்ள ‘ப’கர உயிர் மெய்யும் அதனை அடுத்துள்ள ‘து’ என்பதிலுள்ள குற்றியலுகரமும் அது ஊர்ந்து வரும் மெய்யும் கெடுகின்றன பின்னர் வருமொழியாகிய பஃது எனும் சொல் உள்ள ‘ப’கர உயிர்மெய்யும் ஆய்தமும் கெட ஈற்றிலுள்ள ‘து’ எனும் குற்றியலுகர எழுத்திலுள்ள ‘உ’ கரம் கெடாது பிரிந்து நிற்ப ‘த’ கர ஒற்று ‘ற’கர ஒற்றாக திரிந்து தொண்ணூறு எனப் புணரும்.
நன்னூல்
ஒன்பது எனும் எண்ணுப்பெயர் முன் பத்துää நூறு என்னும் எண்ணுப்பெயர்கள் புணர்தல்: ஒன்பஃது (ஒன்பது) எனும் நிலைமொழியுடன் பத்து நூறு எனும் எண்ணுப்பெயர்கள் வருமொழியாக வந்து புணருமாயின்18
1. வருமொழியாகிய பத்து நூறு என்பனவற்றை முறையே நூறு எனவும் ஆயிரம் எனவும் திரிந்தது.
2.நிலைமொழியின் முதலில் உள்ள ‘ஒ’கர உயிரோடு ‘த’ கர மெய்யை அதற்கு ஆதாரமாக முன் நிறுத்தி
3. அன்நிலைமொழியின் இறுதியிலுள்ள பஃ;து என்பதை கெடுத்து அருகில் நின்ற ‘ன’கர மெய்யை முறையே ‘ண’கர மெய்யாகவும் ‘ல’கர மெய்யாகவும் திரித்துக் கொள்வது முறைமை ஆகும்.
நன்னூல்
ஒன்று முதல் எட்டு எண்களின் முன் பத்து புணர்தல்
ஒன்று முதல் எட்டு முடிய உள்ள எண்கள் நிலைமொழியில் நிற்க பத்து எனும் எண்ணுப்பெயர் வருமொழியாக வந்து புணரும் போது பத்து எனும் சொல்லின் நடுவிலுள்ள ‘த’ கர மெய்கெடுதலும் ஆய்தமாகத் திரிதலுமாகிய புணர்ச்சியைப் பெற்று வரும்.19
தொல்காப்பியம்
ஒன்பது முன் நூறு எனும் சொல் புணர்தல்:
ஒன்பது எனும் எண்ணுப்பெயர் முன் நூறு எனும் சொல் வந்து புணரும் போது முன்னர் ஒன்பது எனும் சொல்லோடு பத்து எனும் சொல் வந்து புணரும்வழிக் கூறியது போல நலைமொழியிலுள்ள ‘ஒ’கரத்தின் முன் தகர ஒற்று மிகும்.20 அவ் ‘ஒ’கரத்தின் முன் நிற்கும் ‘ன’ கர ஒற்று ‘ள’கர ஒற்றாக இரட்டும் நிலை மொழியின் ஈற்றிலுள்ள குற்றியலுகரம் பொதுவிதிப்படி தான் ஏறிய மெய்யோடுங் கெடும். வருமொழியாகிய நூறு எனும் சொல்லின் முதலில் உள்ள நூ என்பதிலுள்ள ‘ந’கர மெய் கெட்டு அதன் மேலேறிய ‘ஊ’காரம் ‘ஆ’காரமாகும் அம்மொழியிடை ஓர் ‘இ’கரமும் ‘ர’கரமும் வரும் வருமொழியின் ஈற்றிலுள்ள குற்றியலுகரமும் அஃது ஊர்ந்து வரும் ‘ற’ கர மெய்யும் கெடும் ஒரு ‘ம’கர ஒற்று வந்து முடியும்.
0 கருத்துகள்