Ticker

6/recent/ticker-posts

உணவே மருத்துவம்



 உணவே மருத்துவம்;

                நாட்டுப்புற மக்களுக்கு உணவே மருந்தாகும். அவர்கள் சாப்பிடும் உணவு முறைகளில் பல்வேறு மருத்துவ சத்துக்கள் அடங்கியுள்ளன. அந்த உணவு வகைகள் ஆராயப்படுகின்றன.

கேழ்வரகு:

                நாட்டுப்புற மருத்துவ வகைகளில் முதலிடத்தில் அமைந்திருந்து ராகி. தென்  மாவட்டங்களில் கேப்பை கிருட்டிணகிரி வட்டார வழக்காற்றில் ஆரியம் என்று கூறுகின்றனர்.

                ராகி விளையும் மண்                                          -              செம்மண்/களிமண்

                வருடத்திற்கு இரண்டு பருவம் -              போகி/பங்குனி/சித்திரை

இலக்கிய சான்று:

                கலியும் மிதவையும்”11 (அகநானூறு) என்னும் அகநானூறு பாடல்களும் குறிப்பிடுகின்றது.அகநானூற்றில் திருமணத்தின்போது கலிஇ பொங்கல்இஉளுத்தம்பருப்புஇ பயறுஇ உணவு வகைகளில் சேர்த்தனர்.

மருத்துவ குணங்கள்:

                கட்டுடல் மேனிக்குக்கேழ்வரகு பயன்படுகிறது. அமெரிக்கா ஜெர்மனி சீனா போன்ற நாடுகளில் வயதுக்கு மீறிய சதைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் வயதுக்கு ஏற்றவாறு உடலமைப்பு பெற்றிருந்தை கண்டிருந்தனர். அவர்களின் வயதுக்கு காரணம் அவர்கள் உண்ணும் கேழ்வரகு.

 

கேழ்வரகின் அதிசய சத்து:

                கேழ்வரகு மாவில் ஓர் அதிசயமான சத்து காணப்படுகின்றது. மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக்கி கல்வியைக் தூண்டும் வினையாற்றல்காணப்படுகிறது. வயிற்று புண்ணை குணமாக்கும். குழந்தைகளின் உளவியல் பார்வையில்(னுளைடihலைய) என்ற குறைபாடு காணப்படுகின்றது. இந்தக் குறைபாடுகள் உடைய குழந்தைகள் பள்ளியைப் பார்த்து ஓடுவார்கள். வினா விடையை கேட்டால் ஒவ்வாமை ஆவது.

                அப்பா -    பா  ப் 

                அம்மா             -    மா ம் 2

என்று எழுதுவார்கள். இக்குறைபாடுகளை நீக்குவதற்கு நாட்டுப்புற மக்கள் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே கேழ்வரகு களியை ஊட்டுவார்கள். அக்குழந்தைகள் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார்கள்.

இன்றைய கல்விக் குறைபாடுகள்:

                தற்போது கல்வி நிறுவனத்தில் பெற்றோர் படிக்காத குழந்தைகளுக்கு வகுப்பில் சேர்ப்பதில்லை. தாய் தந்தை படித்திருக்கிறார்களா.? என்று முதலில் நேர்காணல் செய்த பின்னர் அக்குழந்தைக்கு அனுமதி வழங்குவதைப் பார்க்கலாம். இந்த நாட்டுப்புற மக்களிடம் நீண்ட காலமாக உணவுப் பழக்கம் காணப்படுகிறது. “கேழ்வரகில் செய்த உணவு வகைகளை உண்பதின் காரணமாக கல்வியைத் தூண்டும் அதிசயம் காணப்படுகிறது. இந்த வகை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்குச் செல்வார்கள். இது பற்றி அறிவியல் முறை சோதனை (வுநளவ ஆநவாழன) செய்தால் இன்னும் வியக்கத்தக்க செய்திகள் கிடைக்கும”;.

 

               

                பழங்காலத்தில்  கேழ்வரகு மாவு உணவை உண்டவர்கள் மிகவும் பலசாலியாக இருந்தார்கள். 100 கி எடையுள்ள கற்களை ஒரே நபராக தூக்கும் ஆற்றலுடையவர்கள்.

சான்றுகள்:

                தஞ்சை பெரிய கோவில் கல்லணை சரவண பெலுலா சாத்தூர் அணை ஹலபேடு திருவண்ணாமலை காலபைரவர் செஞ்சி கோட்டை போன்றவை.

உணவு வகைகள்:

                ராகிமால் சென்னையில் புகழ்பெற்று விற்பனையாகும்தேநீர் இதுதான். ராகி பிஸ்கட் ராகி அடை ராகி முறுக்கு தீணிகள்.ராகிஇ இனிப்பு வகைகள் பல்வேறு காணப்படுகிறது.

 

நோய் எதிர்ப்பு தன்மை:

                கண் பார்வை நீண்ட நாள் வாழலாம். நீரிழிவு நோய் சர்க்கரை நோய் வயிற்றுப் புண் குடற்புண் போன்றவை நோய்களை குணப்படுத்த வல்லது. பசுக்கள் அதிக பால் சுரக்கும். வெண்மை புரட்சிக்குக் காரணம் இது. தற்போது கால்நடைகளை தாக்கிக் கொண்டிருக்கும் கோமாரி நோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பிள்ளை வாதநோய் வரும். அதற்குக்  கேழ்வரகு அப்படியே சாப்பிடுவதால் நல்லது.

நோயாளிகள்

                படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகள் இளம் பிள்ளை வாத குழந்தைகள் வறட்சியால் கடுமையான பஞ்சம் போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்குத் தேவாமிர்த்தம்”.

சோளம்:

                தானிய வகைகளில் அடுத்த படியாக சோளம். சோளம் பல்வேறு வகைகளில் காணப்படுகிறது. இது சித்திரை மாதம் பயிரிட்டு கார்த்திகை மாதம் அறுவடை செய்யப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறைதான் பயிரிடப்படுகிறது.

                செம்மண் களிமண் போன்ற மண்வகைகளில் அதிகம் விளையப்படுகின்றன. நீர் நிலை  அதிகம் காணப்படும் இடத்திலும் விளைகின்றது.

வகைகள்:

1.            வெள்ளை சோளம்

2.            கொள்ளை சோளம்

3.            மக்காச் சோளம்

4.            சிவப்பு சோளம்

5.            முத்து சோளம்

என்று பல்வேறு வகைகள் காணப்படுகிறன.

மருத்துவ குணம்:

                குறிப்பிட்டு நோய்க்கான மருந்து என்று கூற இயலாது. இதை அதிகம் சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும். குறிப்பிட்ட அளவு சேர்த்தால் உடல் வலிமை பெறும். முந்தைய கால கட்டங்களில் கூழாகச் செய்து மக்கள் உண்டனர்3.

                மக்காச் சோளம்  சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கின்றது. இன்றைய நிலையில் பல்வேறு வகையான சு10ப்பு வகைகள் மற்றும் சோளப்பொறி போன்றவை செய்யப் பயன்படுகிறது. சிவப்பு சோளம் கால்நடைகளுக்கு சோளத்தட்டை தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. இதனால் வெண்மைப் புரட்சி ஏற்படுகிறது

கம்பு:

                கம்பு தினை வகையைச் சார்ந்தது. நாட்டுப்புற மக்களிடையே மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

வகைகள்:

1.            நாட்டு ரகம்

2.            அரசு ரகம்

விளையும் இடங்கள்:

                செம்மண் களிமண் நீhப்பாசனம் அதிகமாக இருக்கும் இடங்களில் கம்பு பயிர்விளையும்.

 

 

மருத்துவ பயன்கள்:

                எளிய வடிவில் சேர்pமானம் செய்யும் மாவு சத்து அதிகமாக காணப்படுகிறது. உணவுப் பொருட்களை எரிக்கப் பயன்படும். உடலுக்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலம் (ர்ஊடு) சுரக்கச் செய்கிறது. குளுகோஸ் தயாரிக்க பயன்படுகிறது.  கணையத்தில் சுரக்கும் பித்த நீரை வெளியேற்றும். உடலுக்கு வெப்பத்திறனை உருவாக்கும். இந்த வெப்பத்தை குறைப்பதற்கு கம்புடன் கேழ்வரகு அரிசியைச் சேர்த்து கொள்ளலாம்.

தயாரிப்பு பொருட்கள்:

                சத்து மாவுஊநசடயம இரண்டு வயது குழந்தைகளுக்குத் தனியார் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த உணவு கம்பு அடை கொழுகட்டை நாட்டுப்புறத்தில் இதைப்பற்றி ஒரு கதையே காணப்படுகிறது.

                நாட்டுப்புற இளைஞன் ஒருவன் தன்னுடைய மாமியார் வீட்டுக்குச் சென்றான். மாமியார் அடடே!வாங்க மாப்ள வாங்க ...!வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா.?என்று நலம் விசாரித்தாள். திருமணம் ஆன பின்னர் முதன் முதலில் வந்திருக்கிறார் என்று கம்பு மாவில் கொழுக்கட்டை பலகாரத்தை செய்து பரிமாறினாள். என்ன மாப்ள உங்களுக்குக்கொழுக்கட்டைன்னா ரொம்ப பிடிக்குமா.?என்னுடைய பொண்ணுக்குச் செய்ய தெரியுமே அவளிடம் கேள் செய்வாள். என்று மாமியார் கூறினா.

                விடியற்காலை எழுந்ததும் மனைவியிடம் சொல்லி சாப்பிட வேண்டும் என்றான். வரும் வழியெல்லாம் அதன் பெயரை சொல்லிக்கொண்டே வந்தான். வரும் வழியில் ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருந்தது அவன் எதிரே வந்த இஸ்லாமியன் ஒருவன் அந்த ஓடையை தாண்டும் போதுஅத்திரிபச்சான்என்று தாண்டினான். இவனும் அப்படியே தாண்டினான். கொழுக்கட்டைஎன்று சொன்னதை மறந்து அதன் கூறிய சொல்லையே பிடித்துக் கொண்டான். உன் அம்மா அத்திரிபச்சான் சுட்டுபோட்டாள் எனக்கு வேணும் சுட்டுப் போடு என அடம்பிடித்தான். அது என்ன பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்;. அவன் அவளை அடித்து விட்டான்.பின் அப்பெண்ணை கண்டஒரு கிழவி என்னடி உன் உடம்பு கொழுக்கட்டை மாதிரி வீங்கி இருக்கு என்று கேட்டாள். அதற்கு அவன் .....!அது தான் எனக்கு வேணும் என்று கூறினான்.

                இதில் வரும்அத்திரிபச்சன்என்பது உருது சொல்.. ஆனால் பொருளில்லாத சொல்லும் உள்ளது என்று கூறினார்.

                               

 

வரகு:

                இது தினை வகைகளில் ஒன்று. இது மலைப்பயிர். மலைவாழ் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். சாமை வகையைச் சார்ந்தது. சங்க இலக்கியத்தில் தினை பற்றிய ஆதார குறிப்புகள் உள்ளன.

                                கம்பும் திணையும் கலந்து விதைப்போம்

                                வாடா கோமாளி”4             --             நாட்டுப்புறப் பாடல்

 

தயாரிப்பு பொருட்கள்:

                தினையில் அதிகமாக புரோட்டீன் இருப்பதால் திண்டண்டங்கள் 10 கோதுமையுடன் தயாரிக்க பயன்படும். சிறுவர்களுக்கு சத்து மாவு வேதிப்பொருட்கள் தயாரிக்கின்றனர். தினை அடை கஞ்சி பக்கவாத நோயாளிகளுக்கு உடனே நிவாரணம் அளிக்கிறது

புரோட்டின் சத்தின் பயன்:

                உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் முடி உதிராமல் இருக்கவும் செரிமானத்தை தூண்டும். நல்ல கொழுப்புகளை கரைக்கவும் நரம்புகளுக்கு குளுக்கோஸ்(ர்ஊடு) எடுத்து செல்லவும் எலும்பு மஜ்ஜைகளுக்கும் இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாகக் காணப்படுகிறது.

சாமை:

                இதுவும் தினை வகைகளில் ஒன்று. ஆடிப்பட்டத்தில் விளையும். சுமார் மூன்று அடி வரையில் உயர்ந்து வளரும் தன்மையுடையது. ஏழைகளுக்குச் சோறு சமைக்கவும். “வானம் பார்த்த பயிர்” “புன்செய் பயிர்என்றும் கூறலாம்.

மருத்துவ பயன்:

                சாமை மாவு பொருட்களில் அதிக சத்து காணப்படுகிறது. சாமை பால் ஜீரண சக்திக்குப் பயன்படும் இதில்ஆயசநை புழடன டீளைஉரவை தயாரிக்கின்றனர். சத்து மாவு கர்ப்பிணி  பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்தது. சோறு சமைத்து சாப்பிடுவார்கள். கஞ்சி களி போன்றவை செய்யப்படுகிறது.

கீரை வகைகள்

                நெடுங்கல் வட்டாரத்தில் கீரை வகைகள் பல்வேறு உள்ளன

                கீரை என்பது ஒரு வகையான செடி வகையைச் சார்ந்தது. செடியின் தண்டு பகுதி பூ  இலை ஆகியவை கீரையை ஒத்ததாகும். நம் நாட்டில் பல்வேறான கீரை வகைகள் காணப்படுகின்றன. இவையாவும்  உடலுக்கு ஏற்ற வைட்டமின் சத்துக்களை தரவல்லது.

பொன்னாங்கன்னி கீரை:

                நீர் பாசனம் அதிகமாக இருக்கும் இடங்களில் வளரும் கீரை வகை. பொன் 10 ஙா10 கன்னி ஸ்ரீ பொன்னாங்கன்னி. பொன் - தங்கம் நா(வேர்) - நாக்கு கன்னி - பெண். மண்ணில் மறைந்துள்ள தங்க சத்தினை தன் நாக்காகிய வேர் மூலம் சேகரித்துத் தருகின்ற பெண் என்று கூறலாம்.

                தங்க சத்து உடல் மேனியைப் பளபளப்பாக்கும். இதில் தங்க நிற (மேலன்ஸ்) அடங்கியிருக்கிறது. தோல்களுக்கு நிறம் ஊட்டுகிறது. பண்டைய தமிழர்கள் மேனியைப் பளபளப்பாக்க தங்ப பஸ்பம் செய்து உண்டனர். சித்த மருத்துவத்தில் சித்தர்கள் எவ்வாறு தமிழ் இலக்கணத்தை புகுத்தியுள்ளார்கள். எவ்வளவு தமிழ் புலமை மிக்கவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதை இவ்வாறு மூலிகைகளுக்கு அவர்கள் இட்ட சிறப்பு பெயர்களே சான்று.  எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய  கீரை இனமாகும்.

                காசம்பு கைச்சல் கருவிழிநோய் வாதமணல்

                  கூசும்பீ லீகம்கு தாங்குரநோய் - பேரிவையால்

                என்னாங்கா ணிப்படிவம் ஏமமாம் செப்பலென்னைப்

                பொன்னாங்கா  ணிக் கொடியைப் போற்று

                இதனால் தும்பிரரோகம் விழி ரோகங்கள் வாதோடம் தேகச்சூடு மூலரோகம் போம் என்கிறது சித்தர் பாடல்.

சிறுநீரகத்தைச் சீராக்கும் சிறு நெருஞ்சல்:

                சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே..... என்று தொடங்கும் டி.ஆர். மகாலிங்கத்தின் அன்றைய திரைப்பாடலை இன்று கேட்டாலும் நாம் மெய் மறந்து நின்று விடுகிறோம். அது மட்டுமா செந்நாப் புலவர் திருவள்ளுவர் சொல்கிறார்.

                மென்மைக்குப் பேர்ப்போன அனிச்சம் பூக்கள் மற்றும் அன்னப் பறவையின் சிறகுகள் மேல் தலைவியொருத்தி நடந்து சென்றாள். அப்பொழுது அவள் மென்மையான பாதத்திற்கு நெருஞ்சி முள்ளின் மீது நடப்பது போல்துன்புற்றாளாம்.

                அனிச்சமும் அன்னத் தாவியும் மாதர்

                அடிக்கு நெருஞ்சிப் பழம்” 6

                பாதை ஓரங்களிலும் வேலி ஓரங்களிலும் காட்டுப் பகுதியிலும் நிலத்தோடு படர்ந்து காணப்படும் செடியினமாகும். இதில் மூன்று வகைகள் உள்ளன.

1.            சிறு நெருஞ்சில்

2.            ஆனை நெருஞ்சில்

3.            பெரு நெருஞ்சில்

4.            செப்பு நெருஞ்சில்

-              சிறு நெருஞ்சிலானது பெண்கள் அணியும் காதணிபோல் மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று பூத்துக் காணப்படும்.

-              ஆணை நெருஞ்சில் வட்டமான பிளவுபட்ட இலைகளையும் நீளமான காம்பையுடைய இலேசான மஞ்சள் நிற மலர்களையும் காய்களையும் உடையது.

-              செப்பு நெருஞ்சில் சிவப்பு நிறப் பூக்களை உடையது.

சிறிய நங்கை - பெரிய நங்கை:

                இவற்றை உலர்த்தி பொடி செய்து பாம்பு கடிக்குப் பயன்படுத்தலாம்.

நெடுங்கல் வட்டாரத்தில் வசிக்கும் நாராயணன் பாம்பு கடிகளுக்குப்பெயர் சொல்லாத மருந்தை தருவார் அவர் பெயர் சொன்னால் பழிக்காது என்று கூறினார்

இலண்டளை (உண்ணிமுள்):

                இந்தச் செடியில் உள்ள இழையை பறித்து அரைத்து அதன் சாற்றைப் பிழிந்து காயத்தின் மேல் விட்டால் விரைவில் சீழ் பிடிக்காது.

சோற்று கற்றாழை:

                இதன் பட்டையைச் சுத்தம் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும். இந்த கற்றாழையின் வேரை எடுத்து நெருப்பில் சூடு செய்து பிழிந்தால் சாறு வரும். அந்த சாற்றை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

சீத்தா பழம்:

                பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும். இதனுடைய பிஞ்சு () இலையை நன்கு வெயிலில் உலர்த்தி அரைத்து போட்டால் கால்நடைகளுக்கு ஏற்படும் காயத்தை குணப்படுத்தலாம். சீத்தா விதை தலைப்பேன்களை நீக்கும் இதைப்பயன்படுத்தும்போது கவனமாக பயன்படுத்தவேண்டும்.

ஜம்பு நாவல்:

                இந்த மரத்தின் பட்டையை எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து உண்டால் சர்க்கரை நோய் குணமடையும்.நாவல் விதை நன்கு உலர்த்தி பொடி செய்து காலை மாலை சாப்பிட்டால் இரத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

ஆவாரம்:

                ஆவாரம் கொழுந்தை நன்கு அரைத்து தலையில் வைத்தால் சூட்டை குறைக்கும். இதன் பூவை பொடி செய்து சாப்பிட்டால் உடம்பு குளிர்ச்சி ஆகும்.ஆவாரம் பூவினை நிழலில் காயவைத்து மஞ்சள் நெய் கலந்து உடம்புக்குப் பூசினால் மேனி பளபளப்பாகும்.

காவளாம்:

                வயிற்று வலி வந்தால் காவளாம் செடியைப் பிடுங்கி வேரில் உள்ள பட்டையை எடுத்து அப்படியே சாப்பிட்டு வர வயிற்று வலி குணமடையும்.

நெருஞ்சி முள்:

                இலையை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு சாப்பிட்டால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.நெருஞ்சி வேர்நிழலில் காயவைத்து அதை பொடி செய்து காலை மாலை உணவுக்குப் பின்  சாப்பிட்டால் சிறுநீரகக்கல் உடைந்து சிறுநீரில் கலந்து வெளியேறும்.

 

வளவட்டை:

                இலையை அரைத்து கட்டியின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணமடையும்.

இது நாட்டுப்புற மருத்துவத்தில் இடம்பெற்றுள்ள மூலிகை வகையாகும்.

 

வாழைச்சாறு:

                வெட்டுக்காயத்திற்கு வாழைச்சாறு சிறந்தது. வாழைத்தண்டு பொரியல் ரசம் சாப்பிட்டால் சிறுநீரகக்கல் உடைந்து சிறுநீரில் கலந்து வெளியேறும்.

 

பிரண்டை காய்:

                                பசியை அதிகரிக்கும். இரத்தம் சுத்தம் செய்தல் பித்தம் காய்ச்சல் போன்றவற்றைக்  குணமாக்கும்.பிரண்டை சட்னி செய்து சாப்பிட்டால் வயிற்றிள் உள்ள புழுக்கள் வெளியேறும்.

பூண்டு:

                காசநோய் மற்றும் உஷ்ணத்தை குறைக்கும்.பூண்டு உடம்பில் உள்ள இரத்தம் உறையாமல் எப்போதும் நீராகவே வைத்துக்கொள்ளும் உடம்பில் உள்ள சளியை நீக்கும் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

 

 

வெந்தயம்:

                ஊர வைத்து அரைத்து சாப்பிட்டால் வயிற்று வலி இடுப்பு வலி குணமாகும்.பெண்களுக்கு மாதவிடாய் வெள்ளைவயிற்று வலி நீக்கும்.

பூசணி விதை:

                உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.உடம்பில் கெட்ட கொழுப்பு இருந்தால் உயிருக்கு ஆபத்து இரத்த கொதிப்பு ஏற்ப்படும் எனவே பூசணி விதை அதை நீக்கும்.

வெள்ளரி விதை:

                தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் கால் வீக்கம் குறையும்.

பரங்கி பழம்:

                கிட்ட தட்டஎட்டு நூறுஆண்டுகளுக்கு முன்னால் பிரபல கடல் யாத்ரிகரான மார்கோபோலோ தன்னுடன் பயணித்த சக யாத்ரிகர்களிடம் ஒரு வகை காய் பழம் இலை போன்றவற்றை  காட்டி உங்களில் யாருக்காவது வயிற்று உபாதைகள் இருந்தால் அதை போக்கவும் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருப்பவர்களுக்கு வயிற்று தொந்தரவுகள் வராமல் இருக்கவும் இவைகளை சாப்பிடுங்கள் என்று கூறினார்.

                அவர் காட்டியது பப்பாளி காய் பப்பாளி பழம் மற்றும் பப்பாளி இலை ஆகும். அதிக செலவு இல்லாமல் குறிப்பிடத்தக்க கவனிப்பும் இல்லாமல் எளிதாக வளர்ந்து - முழு பலன் தரும் பப்பாளியை டெங்கு காய்ச்சலுக்கான மருந்தாக மருத்துவ உலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பப்பாளியில் அரிதான பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

                இன்று பெரும்பாலான மனிதர்கள் ஜீரணக் கோளாறால் சிரமப்படுகிறார்கள். ஆதனால் காலப்போக்கில் அவர்கள் பல்வேறு நோய்களின் தொந்தரவிற்கும் உள்ளாகிறார்கள். ஜீரணத்தை சரிசெய்யும் அபூர்வ சக்தி பப்பாளியில் இருக்கிறது.

அடங்கியுள்ள சத்துக்கள்:

                வைட்டமின் புரோட்டீன் சர்க்கரை கால்சியம் மக்னீசியம் பொட்டாசியம்சோடியம் ஜீங் பாஸ்பரஸ் பிட்டாகரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன.

                பப்பாளி பிஞ்சு காயிலிருந்து எடுக்கப்படும் வெள்ளை நிற பால் தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இறைச்சியை மென்மையாக்குவதற்கும் சுயிங்கம் தயார் செய்வதற்கும் பப்பாளி பால் பயன்படுகிறது.

                சீறுநீரக கற்களால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த தொந்தரவு இருப்பவர்கள் பப்பாளி காயைத் துருவி சாலட் போன்று தயாரித்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.

பப்பாளி விதை சாறு வயிற்றிள் உள்ள புண்ணைக் குணமாக்குகிறது. பப்பாளிப்பழம் சாப்பிட்டால் மலம் எளிதில் கழியும்.

முக பொழிவு:

                பழுத்த பப்பாளியின் தசை பகுதியை எடுத்து பிசைந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவினால் சரும சுருக்கம் படை போன்றவை நீங்கி முகம் ஜொலிக்கும்.

                தாய்ப்பால் புகட்டும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட வேண்டும். அதன் மூலம் பால் பெருகும். நரம்பு வலியால் அவதிப்டுகிறவர்கள் பப்பாளி இலையைக் கொதித்த நீரில் முக்கியோ தீயில் சுட்டோ வலியுள்ள பகுதியில் வைத்தால் வலி குறைந்து விடும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்