தொகை மரபு
உயிரிறுகளுக்கும் மெய்யீறுகளுக்கும் உரிய பொதுவான புணரியல் விதிகளுக்கெல்லாம் ஒருவாற்றான் தொகுத்து கூறப்பெறுவதால் இவ்வியல் தொகைமரபு எனப் பெயர்பெறுகின்றது.
தொகைமரபில் கூறப்படும் செய்திகள்:
1. பொதுப் புணர்ச்சி
2. வேற்றுமைப் புணர்ச்சி
3. சுhரியை பெறும் மொழிகள்
4. புறனடை
என வகைப்படுத்துகின்றார்.
பொதுப் புணர்ச்சி:
தொல்காப்பியர் பொதுப்புணர்ச்சியை மூன்றாக காட்டுகிறார்.
1. ஈறுபற்றியன
2. சொல்பற்றியன
3. பெயர்பற்றியன
தொல்காப்பியம்.
ஈறுபற்றியன:
உயிரையோ மெய்யையோ இறுதியாகக் கொண்ட சொற்கள் நிலைமொழியாக நிற்கும். அவற்றுக்கு முன்னால் க ச த ப என்னும் வல்லெழுத்துக்களை முதலாக உடைய சொற்கள் வந்து அல்வழியிலும் வேற்றுமையிலும் புணரும். க ச த ப என்பவற்றிற்கு இனமாகிய ங ஞ ந ம என்னும் மெல்லெழுத்துக்கள் தோன்றும்.1
நன்னூல்
நன்னூலார் க ச த ப போன்ற எழுத்துக்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
தொல்காப்பியம்.
தொல்காப்பியர் மொழிக்கு இறுதியில் வரும் 24 ஈறுகளைக் கொண்ட சொற்கள் நிலைமொழியாக நிற்கும். அச்சொற்களின் முன் ஞ ந ம ய வ என்னும் மெய்யெழுத்துக்களை முதலாகவுடைய சொற்களும் 12 உயிரெழுத்துக்களை முதலாகவுடைய சொற்களும் அவை அல்வழி வேற்றுமை என்னும் இருவகை பொருண்மையிலும் புணரும் அச்சொற்கள் எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகும்.2
நன்னூல்.
நன்னூலார் தொல்காப்பியர் குறிப்பிடுதைப் போன்று குறிப்பிடுகிறார். மேலும் சிலவற்றை நன்னூலார் குறிப்பிடுகிறார். தனி குற்றெழுத்தின் பின் நின்ற‘ய’ கர மெய்க்கும் ஓரெழுத்தொரு மொழியாகிய ‘ஐ’ காரத்துக்கும் நொ து என்பனவற்றிற்கும் முன்னே ஞ ந ம க்களை முதலாக உடைய வருமொழிகள் வந்து புணரும் போது அவை மிக்குப் புணரும்.3
ண ள ன ல கர மெய்களை இறுதியாகவுடைய நிலைமொழிகளின் பின் ‘ந’கரத்தை முதலாகவுடைய வருமொழிகள் வந்து புணரும் போது வருமொழியின் முதலில் உள்ள ‘ந’கரம் திரிந்து புணரும்.
தொல்காப்பியம்.
மெல்லெழுத்து உறழ்தல்:
தொல்காப்பியர் மேற்சொன்ன ஐந்தனவற்றுள் ஞ ந ம எனும் மூன்றும் மெல்லெழுத்துக்களாகும் இம்மூன்றையும் முதலாகவுடைய மொழிகள் வருமொழியாக வந்து தொடர் மொழியோடு புணரும் போது இயல்பாகவும் முடியும் மிக்கும் முடியும்.4
நுன்னூல்.
நன்னூலார் மெல்லெழுத்து உறழ்ச்சி பற்றி குறிப்பிடவில்லை
தொல்காப்பியம்.
தொல்காப்பியர் ‘ண’ கர ‘ன’கர ஈற்றுச் சொற்கள் நிலைமொழியாக நிற்கும் அச்சொற்களின் முன் ‘ய’ என்னும் முதலெழுத்தை உடைய வினைச்சொல் வந்து புணரும் அச்சொல்லில் ‘யா’ நிற்கும் இடத்தில் ‘ஞா’ என்னும் எழுத்து நிற்பினும் அவ்வினைத் தன்மை மாறாது என்று கூறுகிறார்.5
நன்னூல். ண ன எனும் சொற்கள் மெய்யெழுத்துக்களை ஈறாக உடைய சொற்கள் நிலைமொழியாக நிற்கும் அவற்றின் வருமொழியாக வரும் சொல் வேற்றுமை அல்லாத அல்வழி பொருண்மையில் புணரும் போது எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாகும்.6
தொல்காப்பியம்.
வேற்றுமையில் ண ன இயல்பாகும் இடம்:
ண ன ஈற்றுச் சொற்கள் நிலைமொழியாக நின்று வல்லினம் அல்லாத பிற மெய்யெழுத்துக்களுடன் வேற்றுமைப் பொருண்மையில் புணரும்.7 அப்புணர்ச்சியில் முன் அல்வழிக்குக் கூறப்பட்ட விதியைப் பொருந்தி நிற்கும் என்று குறிப்பிடுகின்றார்.
நன்னூல்.
‘ண’கர ‘ன’கர வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே ‘ட’கரமாகவும் ‘ற’கரமாகவும் இடையினமும் வந்தால் இயல்பாகவும் புணர்ந்து முடியும். அல்வழியில் மூன்றின மெய்கள் வந்தாலும் இயல்பாகப் புணரும்.8
தொல்காப்பியம்.
ல ன முன் த ந க்கள் திரிதல்:
ல னஎனும் மெய்களை இறுதியாகவுடைய நிலைமொழிகளின் முன் த ந எனும் மெய்களை முதலாகவுடைய வருமொழிகள் வந்து புணரும் போது வருமொழி முதலிலுள்ள த ந மெய்கள் முறையே ற ன எனும் மெய்களாகத் திரிந்து புணரும்.9
நன்னூல். நன்னூலார் கூறும் போது நிலைமொழியின் இறுதியிலுள்ள ‘ன’கர ‘ல’கர மெய்களின் முன் வருகிற ‘த’கர ‘ந’கர மெய்கள் முறையே ‘ற’கர ‘ன’கர மெய்களாகத் திரியும். ‘ண’கர ‘ள’கர மெய்களின் முன் வருகிற ‘த’கர ‘ந’கர மெய்கள் முறையே ‘ட’கர ‘ண’கர மெய்களாகத் திரியும்.10
தொல்காப்பியம்.
சொல்பற்றியன:
முன்னிலை வினைச்சொற்கள் வன்கனத்தோடு புணர்தல்:
தொல்காப்பியர் இதனை கூறும் போது உயிரைழுத்துக்களை இறுதியாகக் கொண்ட முன்னிலை வினைச்சொல்லும் மெய்யெழுத்துக்களை இறுதியாகக் கொண்ட முன்னிலைவினைச் சொல்லும் வல்லெழுத்துக்களை முதலாகக் கொண்ட வருமொழிகளுடன் புணரும் போது இயல்பாக முடிதலும் உறழ்ந்தும் புணரும்.11
நன்னூல்.
நன்னூலார் முன்னிலை வினைபற்றி குறிப்பிடும் போது ஏவல் வினையையும் குறிப்பிடுகிறார். உயிர் எழுத்துகளையோ ‘ய’கர ‘ர’கர மெய்களையோ இறுதியாகக் கொண்ட முன்னிலைவினை முன் வல்லெழுத்துக்களை முதலாக கொண்ட வருமொழிகள் வந்து புணரும் போது அவை இயலபாகப் புணரும்.12
தொல்காப்பியர் ஏவல்வினையைப் பற்றி குறிப்பிடவில்லை.
உயிர் எழுத்துக்களையோ ‘ய’கர ‘ர’கர ‘ழ’கர மெய்களையோ இறுதியாகக் கொண்ட ஏவல் வினை முன் வல்லெழுத்துக்களை முதலாகக் கொண்ட ஒரு மொழிகள் வந்து புணரும் போது அவை இயல்பாகப் புணரும்.
பெயர் பற்றியன
தொல்காப்பியம்.
உயர்திணைப் பெயர்ப் புணர்ச்சி:
உயிரையும் புள்ளியையும் இறுதியாகவுடைய உயர்திணைப்பெயர்கள் நலைமொழியாய் நிற்க வருமொழி முதலில் உயிர் வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய எழுத்துக்களை முதலாக உடைய சொற்களுடன் அல்வழி வேற்றுமை ஆகிய இருவகை புணர்ச்சியின் கண்ணும் இயல்பாய் புணர்ந்து முடியும்.13
உயர்திணைப் பெயர் சிறப்பு விதி: உயிரிற்று உயர்திணைப் பெயர்களுள் ‘இ’கர வீற்று உயர்திணைப் பெயர்கள் திரிந்து முடியும் தன்னையினை உடையனவாகும்.14
நன்னூல்.
பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்: நன்னூலார் இருதிணைகளுக்கும் பொதுவான பெயர்களுக்கும் உயர்திணைப் பெயர்களுக்கும் இறுதியிலுள்ள மெய்கள் வருமொழி முதலில் வல்லெழுத்துக்கள் வந்து புணர்தல் நிலைமொழி ஈற்று மெய்யெழுத்து இயல்பாகும்;.15
பொதுப்பெயர் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
தொல்காப்பியம்.
வேற்றுமைப் புணர்ச்சி:
இரண்டாம் வேற்றுமை:
1. மெல்லெழுத்து மிக்கு வரவேண்டிய இடத்தில் மெல்லெழுத்து மிகுந்து வராது வல்லெலுத்து வருதல்.
2. வல்லெலுத்து மிக்கு வரவேண்டிய இடத்தில் வல்லெலுத்து மிக்கு வாராது மெல்லெழுத்து மிக்கு வருதல்.
3. வல்லெழுத்து மிகாது இயல்பாக புணரவேண்டிய இடத்தில் வல்லெழுத்து மிகுந்து புணர்தல்
4. உயிர் மிகுந்து வரவேண்டிய இடத்தில் கெட்டு வருதல்
5;. சுhரியை நின்று புணரவேண்டிய இடத்தில் அச்சாரியை கெட்டு வருதல்
6. சாரியை உள்ள விடத்து ஐ கார உருபு வெளிப்பட்டு நிற்றல்
7. சாரியை பொற வேண்டிய இடத்தில் சாரியை பெறாமல் இயல்பாகப் புணரும் மொழிகளிடத்து வருமொழிக்கண் மிக்கும் நிலைமொழிக்கண் திரிந்தும் வரும் வல்லினம் உறழ்ச்சியாகத் தோன்றுதல்.
8. உயர்திணைப் பெயரிடத்துத் தன் உருபு தொக்கு நில்லாது விரிந்து வருதல்.
9. அஃறிணை விரவுப்பெயரிடத்துத் தன் உருபு தொகாது விரிந்து வருதல்.
10. ஒற்றுத்திரியுமிடத்துத் திரியாது வருதலும் இவை போல்வன பிறவும் ஐ கார வேற்றுமைத் திரிபுப் புணர்ச்சிகளாகும்.16
நுன்னூல். நன்னூலார் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி பற்றி கூறும் பொழுது வேற்றுமை உருபிற்கு விதிக்கப்பட்ட பொதுவிதியுடன் முடிதலின்றி அப்படி விதித்த இயல்பில்
1. விகாரமாகியும்
2. விகாரமாக வேண்டிய இடத்தில் இயல்பாகியும்
3. உயர்திணைப் பெயரிட்த்து வெளிப்பட்டும் மறைந்தும்
4. பொதுப் பெயரில் விரித்தும் மறைத்தும்
அவை போன்ற மற்ற வேறுபாடுகளும் பெற்று வரும்.17
தொல்காப்பியம்.
அல்வழியில் ‘இ’கர ‘ஐ’கார ஈறுகள்: அல்வழியில் ‘இ’கர ‘ஐ’கார ஈறுகள் புணரும் முறையைப் பற்றி கூறும் போது வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சியில் ‘இ’கர ‘ஐ’காரங்களை ஈறாக உடைய பெயர்ச் சொல் மூவகை முடிபுகளைப் பெறும். அவை 1. இயல்பாதல் 2. வல்லெழுத்து மிகுதல் 3. உறழ்ந்து முடிதல் என்று குறிப்பிடுகிறார்.18
நன்னூல்:
நன்னூலார் அல்வழிப் புணர்ச்சியில் இ ஐ என்ற ஈற்றை உடைய அஃறிணைப் பெயரின் முன் வல்லினம்வரின் இயல்பாதலும் மிகுதலும் ஒன்றிற்கே ஒரு கால் மிகாமையும் ஒரு கால் மிகுதலும் ஆகும் என்று கூறுகின்றார்.19
தொல்காப்பியம்.
மூன்றாம் வேற்றுமை புணர்ச்சி:
தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியில் உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய சொற்களின் முன் மூன்றாம் வேற்றுமைப் பொருண்மையில் வினைச் சொற்கள் வந்து புணரும் போது இயல்பாகப் புணர்தலும் உறழ்ந்துப் புணர்தலும் நிகழும் என்று கூறுகிறார்.20
நன்னூல்.
நன்னூலார் மூன்றாம் வேற்றுமைத் தொகையில் மெய்யும் உயிரும் இறுதியாக நின்ற சொற்களின் முன் கருத்தாவாகிய நிலைமொழிப் பொருள்களால் ஆகிற விணைச்சொற்கள் வருமொழியாக வந்தால் அவ்விடத்து வரும் வல்லினம் பொது விதிப்படி முடிதலேயன்றி இயல்பாயும் உறழ்ந்தும் முடியும்.21
தொல்காப்பியம்.
ஆறனுறுபும் நான்கனுறுபும்:
நெடுமுதல் குறுகும் மொழிகளின் முன் ஆறாம் வேற்றுமையுருபும் (அது) நான்காம் வேற்றுமையுருபும் (கு) வந்தால் குறியதன் முன்னர் தன்னுரு இரட்டலும் அவ்விடத்து ஒரு ‘அ’கரம் மட்டும் பெறும்என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.22
நன்னூல்.
நான்காம் வேற்றுமை உருபாகிய கு புணரும் போது நடுவில் ‘அ’கரச் சாரியையின் உயிர் வந்தவிடத்;து ஆறாம் வேற்றுமை உருபுகளோடு புணரும் போது அவ் வேற்றுமை உருபுகளின் முதலில் உயிர் வந்த விடத்தும் அவ்வேழு பெயர்களின் விகார மொழிகளின் (தன் தம் நம் என் எம் நின் நும்) இறுதியிலுள்ள ஒற்றுகள் இரட்டித்து வாரா என்று நன்னூலார் குறிப்பிடுகிறார்.23
தொல்காப்பியம்.
ஏழாம் வேற்றுமைப் புணர்ச்சி:
தொல்காப்பியர் ஏழாம் வேற்றுமையில் அ இ உ எனும் சுட்டெழுத்துக்களை முதலாகவுடைய ‘இ’கர வீற்று இடைச்சொற்களும் ‘எ’கர வினாவெழுத்தை முதலாகவுடைய ‘இ’வீற்று இடைச்சொற்களும் சுட்டெழுத்துக்கள் நீண்ட ‘ஐ’கார வீற்றுச் சொற்களும் யா வென்னும் வினாவெழுத்தை முதலாகவுடைய ‘ஐ’கார வீற்று இடைச்சொல்லும் வல்லெழுதது மிக்கும் உறழ்ந்தும் புணரும் தன்மையனவாகும்.24
நன்னூல்.
நெட்டெழுத்தை அடுத்து நிற்கும் ஒற்றெழுத்துக் கெடுதல் குற்றெழுத்தை அடுத்து நிற்கும் ஒற்றெழுத்து இரட்டித்தல் என்பன புணர்ச்சியில் ஏற்படும் திரிபுகளாகும். இவ்விரண்டும் வழக்கின்கண் வழிவழியாக பின்பற்றப்படும் முறை பற்றி சொல்லுகிறார்.
‘ண’கர ‘ன’கர ஈற்றின் கேடு:
நன்னூலார் இதனைப் பற்றி குறிப்பிடும் போது தனிக் குற்றெழுத்தை சாராமல் ஒரு மொழி தொடர்மொழிகளைச் சார்ந்துள்ள ‘ண’கர ‘ன’கர மெய்கள் வருமொழிக்கு முதலாக வந்து ந கரம் திரிந்த விடத்து தானும் கெடும்.25
நன்னூலார் தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ள என்ற மெய்கள் அல்வழியில் வருமொழிக்கு முதலாய் வந்த த திரியுமிடத்துக் கெடும்.
அல்வழியிலும் வேற்றுமையிலும் வருமொழிக்கு முதலாக வந்த ந என்ற மெய் திரிந்தபின் கெடும்.
வல்லின எழுத்துக்களை உடைய முதன் மொழிவரின் அல்வழியில் உறழாமல் இயல்பாதலும் பொருந்துவன உண்டு.
நன்னூல்
‘ல’கர ‘ள’கர ஈற்றுச் சொற்கள் புணர்தல்:
அல்வழிப் புணர்ச்சியில் தனிக் குறிலைச் சார்ந்து வாராத ‘ல’கர ‘ள’கர மெய்கள் வருமொழிக்கு முதலாக வந்த ‘த’கரம் திரிந்தபின் தாம் கெடும்.26
அல்வழி வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழிக்கு முதலாக வந்த ‘ந’கரம் திரிந்த விடத்து நிலைமொழியின் இறுதியில் உள்ள ‘ல’கர ‘ள’கரங்கள் தாமும் கெடும்.
வருமொழிக்கு முதலில் வல்லெழுத்துக்கள் வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாதலும் திரிதலும் ஆகிய புணர்ச்சியைப் பெறும். வேற்றுமைப் புணர்ச்சியில் திரியாமல் இயல்பாகப் புணரும்;.
0 கருத்துகள்